வீரப்பன்: சேத்துக்குளி கோவிந்தனின் தம்பி கைது
Subscribe to Oneindia Tamil
மைசூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியான சேத்துக்குளி கோவிந்தனின் தம்பி வீரப்பாவை கர்நாடக அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
முன்பொரு முறை ஒகேனக்கல்லில் வீரப்பனையும் அவனது கூட்டாளிகளையும் கர்நாடக அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தபோது ஏற்பட்ட மோதலில், வீரப்பா ஒரு போலீஸ் அதிகாரியைக் கொலை செய்ததாக அவன் மீது கர்நாடக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந் நிலையில் மலை மாதேஸ்வரா பகுதியில் சேத்துக்குளி கிராமத்தில் வீரப்பா பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து அதிரடிப் படையினர் அக் கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். இம்முறை வீரப்பாவால் தப்ப முடியவில்லை.
அவனைக் கைது செய்த கர்நாடக அதிரடிப் படையினர் கொள்ளேகால் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications