கருணாநிதியால் வந்ததா காவிரி?: கேட்கிறது பாஜக
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
கர்நாடக அணைகளில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத காரணத்தால்தான் அம் மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு கருணாநிதி தான் காரணம் என்று கூறுவது பெரும் ஏமாற்று வேலை என்று தமிழக பாஜக செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள அணைகளுக்கு கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகள் நிரம்பி வருகின்றன.
தண்ணீரை இதற்கு மேல் சேர்த்து வைக்க முடியாது என்பதால்தான் நீரைத் திறந்துவிட்டுள்ளது. உண்மை இப்படி இருக்க, கருணாநிதி கோரினார், இதனை ஏற்று கர்நாடகம் தண்ணீர் விட்டது என்று கூறினால் அது சுத்தமான ஏமாற்று வேலை.
தனக்குப் போக உள்ள உபரி நீரைத்தான் கர்நாடகம் தருகிறது. எனவே இது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications