தேர்தல் அதிகாரியிடம் அதிமுக, திமுக தனித்தனியே புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலிலிருந்து ஏராளமானவர்களின் பெயர்கள் விடுபட்டது குறித்து விசாரணை நடத்தும் கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸிடம் அதிமுக, திமுக கட்சியினர் தனித்தனியாக புகார்கள் தெரிவித்தனர்.

அதிமுக சார்பில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்னையன் ஆகியோரும், திமுக சார்பில் அக் கட்சிப் பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும் தேர்தல் அதிகாரியைச் சந்தித்தனர்.

அதிமுகவுக்குச் சாதகமான 43 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளாதாகவும், தேர்தல் பணியாற்றிய ஊழியர்களில் சிலர் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு, இந்த வாக்காளர்களை நீக்கியுள்ளனர் என்றும் தாமஸிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

பின்னர் ஆற்காடு வீராசாமி, இளங்கோவன் ஆகியோர் தாமஸைச் சந்தித்து,

மாநிலம் முழுவதும் லட்சக் கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் மீது அதிமுக புகார் கூறுவது தவறு. பல இடங்களில் அரசு ஊழியர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளன. எனவே இது ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில்தான் நடந்திருக்க வேண்டும் என்று திமுகவினர் கூறினர்.

இரு கட்சியினரும் தங்களது புகாருக்கான ஆதாரங்களையம் அளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+