பாசனத்துக்காக குண்டாறு, ராமநதி அணைகள் திறப்பு: ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாசனத்துக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடானா அணை, குண்டாறு அணை உள்ளிட்ட 5 அணைகளைத் திறக்க முதலவர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடானா நீர்த்தேக்கம், அடவிநயினார் நீர்த்தேக்கம், குண்டாறு நீர்த்தேக்கம், கருப்பா நதி நீர்த்தேக்கம் மற்றும் ராமநதி நீர்த்தேக்கம் ஆகிய ஐந்து நீர்த் தேக்கங்களில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடக்கோரி திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் எனக்கு கோரிக்கை விடுத்—தனர்.
அதனை ஏற்று அந்த 5 நீர்த்தேக்கங்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால் மொத்தம் 8,731 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications