தமிழக எல்லையை அடைந்தது கபினி நீர்
சேலம்:
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை இன்று மதியம் வந்தடைந்தது.
கபி-னி அணை நிறைந்ததையடுத்து கர்-நாடகம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளது. வி-நாடிக்கு 21,000 கன அடி நீர் வரை திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நீர் நேற்று மாலைக்குள் மேட்டூர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேட்டூர் அணைக்கு வரும் வழியெல்லாம் தண்ணீரைப் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டதாலும், கடும் வெயிலில் பாலம் பாலமாக வெடித்துக் காணப்படுவதாலும், கபி-னி தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது.
இதனால் குறைந்த அளவு நீரே மேட்டூர் -நாக்கி வந்து கொண்டுள்ளது. அதுவும் மிகவும் மெதுவாக வந்து கொண்டுள்ளது. வழக்கமாக கபி-னி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் வந்து சேர 72 மணி -நரம் ஆகும்.
கபி-னி நீரை ஆற்றுப் படுகைகள் உறிஞ்சி வருவதால் இம்முறை சற்று தாமதமானது. இன்று பிற்பகல் தமிழக எல்லையான கபினியிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் பில்லிகுண்டு பகுதியை வந்தடைந்தது. இன்று மாலை வாக்கில் மேட்டூர் அணைக்கு நீர் வந்து சேரும் என்று தெரிகிறது.
தற்போது மேட்டூர் அணையில் 40.05 அடி நீர் இருப்பு உள்ளது அதாவது 12.35 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,856 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications