ராஜீவ் கொலை கைதிகளுடன் நெடுமாறன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனைப் பெற்றவர்களை வேலூர் மத்தியச் சிறையில் தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சந்தித்துப் பேசினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பலமாதங்கள் சிறையில் வாடியவர் நெடுமாறன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த நெடுமாறன்,நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.
இந் நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனைப் பெற்ற கைதிகள் முருகன், சாந்தன்,பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதிகள் ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்ஆகியோரை வேலூர் சிறையில் நெடுமாறன் சந்தித்துப் பேசினார். மகளிர் சிறையில் உள்ள முருகனின் மனைவிநளினியையும் நெடுமாறன் சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications