பொடா வாபஸை எதிர்த்து பாஜக போராட்டம்
சென்னை:
பொடா சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறுவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 4 நாட்கள் பொதுக்கூட்டம்நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீவிரவாதத்தைக் கண்டித்தும், மத்திய அரசு பொடா சட்டத்தை வாபஸ் பெறுவதைக் கண்டித்தும் அடுத்த மாதம்13-ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 80-வது பிறந்தநாளையொட்டி அவர் கொண்டு வந்த நல்ல திட்டமான நதிகள்இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த பாஜக முடிவு செய்துள்ளது.
அதன்படி அவரது 80-வது பிறந்தநாளான டிசம்பர் மாதம் 25ம் தேதி அன்று பாஜகவினர் 80 நாட்கள்பாதயாத்திரையை திருச்செந்தூரில் இருந்து தொடங்கி சென்னையில் முடிக்க உள்ளனர்.
தமிழக சட்டசபையில் பாஜக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். எதிர்க்க வேண்டும் என்பதற்காகஅரசின் நல்ல திட்டங்களை எதிர்க்க மாட்டோம். கட்டாய மதமாற்ற தடை சட்டத்தைத் தொடர அரசைவலியுறுத்துவோம்.
நடிகர் விஜயகாந்துக்கும், டாக்டர் ராமதாசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையில் விஜயகாந்துக்கு பாஜகமுழு ஆதரவை அளிக்கும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications