நாளை முதல் சத்துணவில் முட்டை
சென்னை:
சத்துணவுத் திட்டத்தின் கீழ் நாளை முதல் 75 லட்சம் மாணவ, மாணவியருக்கு முட்டை வழங்கும் திட்டம்தொடங்குகிறது.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தின் தொடக்கத்தில் சத்துணவுடன் முட்டையும்வழங்கப்பட்டு வந்தது. பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது.
இந் நிலையில் மீண்டும் சத்துணவுடன் முட்டையும் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி நாளை முதல்சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம் தொடங்குகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன்னிலையில் அனைத்து மாவட்டங்களிலும் முட்டை வழங்குவது தொடங்குகிறது.அதன் பின்னர் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சத்துணவுடன் முட்டை வழங்கப்படும்.
தற்போது சத்துணவுத் திட்டத்தின் கீழ் 2 முதல் 15 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுவழங்கப்படுகிறது. வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களுக்கு பயறு, கடலை வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications