அறிவாலயம்: சட்டப்படி சந்திப்போம்- கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அண்ணா அறிவாலயம் முன்பு உள்ள காலியிடம் தொடர்பாக சென்னை மாநகராட்சி எழுப்பியிருக்கும்பிரச்சனையை சட்டப்படி சந்திப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பெங்களூரில் சில நாட்கள் ஓய்வு எடுத்த கருணாநிதி இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயகாந்த்- பாமக மோதல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
அண்ணா அறிவாலயம் முன்பு உள்ள காலியிடத்தை சென்னை மாநகராட்சி கையகப்படுத்துவது தொடர்பாகமேற்கொண்டு வரும் சர்ச்சையை சட்டப்பூர்வமாக சந்திப்போம். எதையும் சட்டப்பூர்வமாக சந்தித்துத்தான்திமுகவுக்குப் பழக்கம்.
பெங்களூருக்கு ஓய்வு எடுக்க மட்டுமே சென்றேன். அங்கு இலக்கியப் பணி எதிலும் ஈடுபடவில்லை என்றார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications