காவிரி: உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பை பெற வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

உதகமண்டலம்:

காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை உடனடியாக பெற நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி கூறியுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் உதகமண்டலத்தில் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில்இரண்டு நாட்கள் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் விவரம் வருமாறு:

காவிரி நதி நீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய பங்கை பெற்றுத் தரதமிழக அரசும், மத்திய அரசும் முயல வேண்டும். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பைஉடனடியாக பெற வேண்டும்.

சென்வாட் கலால் வரியை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய 60,000 பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்பவேண்டும். வேலைநீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி, கூட்டுறவு மற்றும் சாலைப் பணியாளர்களை மீண்டும்பணியில் சேர்த்துக்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும்.

பொதுக்குழு கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி கூறியதாவது:

ஜெயலலிதா தான் பறித்த உரிமைகளையே மீண்டும் வழங்கி வருவதால் அதை வரவேற்பதற்கு ஒன்றுமில்லை.ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவே இத்தகைய நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்துக்குத் தீமை செய்வதில் திமுக-, அதிமுக கட்சிகள் இரண்டுமே சளைத்தவை அல்ல.

அரசியல்வாதிகளுக்கும் திரைத் துறையினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டியதில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+