விஜயகாந்த் கல்லூரியை முற்றுகையிட பாமக முடிவு
காஞ்சிபுரம்:
நடிகர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை முற்றுகையிட்டுப் போராட்டம்நடத்த காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக முடிவு செய்துள்ளது.
பாமக தொண்டர்களுக்கும், விஜயகாந்த் தொண்டர்களுக்கும் இடையிலான மோதல் பல ரூபங்களில் வெடித்துவருகிறது. இந் நிலையில் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த பாமகவினர் முடிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக கூட்டம் மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் நடந்தது. இதில்,வேண்டும் என்றே பாமகவை வம்புக்கு இழுக்கும் விஜயகாந்த்துக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.
தனது தேவையில்லாத வேலையை விஜயகாந்த் நிறுத்திக் கொள்ளாவிட்டால், விஜயகாந்த் படங்களை திரையிடவிடாமல் தடுத்து நிறுத்துவது, அவரது கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.
இந் நிலையில், பாமகவினர் யாரும் விஜயகாந்த்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். எனவே பாமகவினர் விஜயகாந்த் கல்லூரியை முற்றுகையிடும் தங்களதுமுடிவை மாற்றிக் கொள்வார்கள் என்றே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications