காவிரி: எல்லாரும் ஒன்றுபட வேண்டும்- கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை பெற தமிழக மக்கள் ஒன்று கூடி பாடுபட வேண்டும் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக ஒரு கன்னட நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
கடந்த 10 வருடங்களாக காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதைவிரைவில் பெற வேண்டுமானால், அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழக மக்கள் எல்லாம் ஒன்று கூடி போராடவேண்டும் என்றார்.
மத்திய நீர்வளத் துறையை திமுக கேட்டுப் பெறாதது ஏன் என்று கேள்விக்குப் பதிலளிக்கையில், காவிரிப்பிரச்சினையில் தொடர்புடைய மாநிலங்களில் ஏதாவது ஒன்றுக்கு நீர்வளத் துறை ஒதுக்கப்பட்டால் பிரச்சினையைசுமூகமாகத் தீர்ப்பதில் சிக்கல் ஏற்படும் என்றார்.












Click it and Unblock the Notifications