ஜெ. வீட்டை முற்றுகையிட்ட விரிவுரையாளர்கள்
சென்னை:
பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன இளநிலை விரிவுரையாளர்கள் இன்று முதல்வர்ஜெயலலிதாவை வீட்டை முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், 400க்கும்மேற்பட்ட இளநிலை விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் சில நாட்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி வேலை இழந்தஊழியர்கள் இன்று காலை ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுக்க சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு அருகேகுழுமினர்.
ஆனால் அவர்களை ஜெயலலிதா வீட்டுக்கு அருகே செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை. நீண்ட நேரத்திற்குப்பிறகு ஒவ்வொருவரையும் சோதனை செய்த பின்னர் போலீஸார் ஜெயலலிதா வீட்டிற்குள் செல்ல அனுமதித்தனர்.
ஜெயலலிதா வீட்டுக்கு அருகே முற்றுகைப் போராட்டத்தில் விரிவுரையாளர்கள் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications