அகதிகள் இலங்கை திரும்பும் செலவை ஏற்கிறது ஐநா
சென்னை:
தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களது பயணச் செலவை ஏற்கஐ.நா. மனித உரிமை ஆணையம் முன் வந்துள்ளது.
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் சுமித் நாகந்தல செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் வசிக்கிறார்கள். இவர்கள் தாயகம் திரும்ப விரும்பினால்அதற்கான செலவை ஏற்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை துணைத்தூதரகம் மேற்கொண்ட முயற்சியால் இச் சலுகை கிடைத்துள்ளது.
அகதிகளின் பின்னணி குறித்து ஆராயந்து அவர்களது பயணச் செலவை ஐ.நா. ஏற்கும்.
தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து குறித்து தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ளநிலையை இலங்கை அரசு சரியாகப் புரிந்துகொண்டுள்ளது. எனினும், நிலைமை சுமுகமான பின்னர், உரியஅனுமதியை முதல்வர் ஜெயலலிதா அளிப்பார் என்று நம்புவதாகக் கூறினார் சுமித் நாகந்தல.












Click it and Unblock the Notifications