விம்பிள்டன்: மகேஷ் பூபதி தோல்வி
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி தோற்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் 3வது சுற்றில் மகேஷ் பூபதி- மாஸ்மிர்னி (பெலாரஸ்) இணை 4-6, 6-3, 6-8 என்ற செட் கணக்கில் ஜுலியன்நோலே (ஆஸ்திரியா)- நெனாட் ஜிமோஜிச் (செர்பியா) இணையிடம் தோல்வியடைந்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்றில் அமெரிக்காவின் லின்ட்சே டேவன்போர்ட் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெரா சோனாரெவாவை தோற்கடித்து கால் இறுதிக்குத் தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அய் சுஜியமா 6-3, 7-5 என்ற நேர் செட்களில் தாய்லாந்து வீராங்கனை தாமரனைதோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை மரியா ஷரயோவா 6-4, 7-5 என்ற நேர் செட்களில்அமெரிக்காவின் அமெய் பிராசியரைத் தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்றில் செபாஸ்டியன் குரோஜென் (ஸ்பெயின்) வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.












Click it and Unblock the Notifications