லாட்டரி விற்பனையாளர்கள் ஜெவிடம் மனு
சென்னை:
தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதி அளிக்கக் கோரி லாட்டச் சீட்டு முதலாளிகளும், விற்பனையாளர்களும்முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்தில் இன்று கோக்கை மனு கொடுத்தனர்.
தற்போது ஜெயலலிதாவுக்கு நேரம் சரியில்லை என்றும், கோவில் கும்பாபிஷேகங்கள் அவரது ஆட்சிக்கு உலை வைத்து விடும் என்றும்தமிழகத்தில் அனைத்து லாட்டரிச் சீட்டுகளின் விற்பனைக்கும் அதிமுக அரசு தடை விதித்தது. மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்பல்வேறு சலுகைத் திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது.
இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க, ஏகப்பட்ட வரியைக் கொண்டு வரும், லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதிதரலாம் என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது.
இதையடுத்து லாட்டரி அதிபர்கள் போயஸ் வட்டாரத்தின் பலமிக்கவர்களைச் சந்தித்து கவனித்து விட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து லாட்டரி விற்பனைக்கு மீண்டும் அனுமதி வழங்கக் கோரி மாநாடு நடத்துமாறு லாட்டரிச் சீட்டு அதிபர்களிடம்சக்தி வாய்ந்தவர்கள் சொல்லி அனுப்பியதாகவும், அப்படிச் செய்தால் உங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும்கூறியதாகவும தெரிகிறது.
இதையடுத்து லாட்டச் சீட்டு விற்பனையாளர்கள் கோரிக்கை மாநாடு நடத்தி முடித்தனர்.
இந் நிலையில் அகில இந்திய லாட்டரிச் சீட்டு விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் உஸ்மான் பயஸ் தலைமையிலான குழு, இன்று சென்னைதலைமைச் செயலகத்தில் முதல்வரின் அலுவலகத்தில் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
அதில், பல லட்சம் பேருக்கு வாழ்வளிக்கும் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications