ஈவ் டீசிங்: 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம் மூணாறு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் இந்திராணி, ராஜபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கிபத்தாவது வகுப்பு படித்து வந்தார்.
அவர் பள்ளிக்கு போகும்போதும், வரும்போதும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இந்திராணியைக் கேலி செய்துள்ளனர்.இதனால் மனம் உடைந்த இந்திராணி, இன்று விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன்பு, ஈவ் டீசிங் காரணமாகவே தான் விஷம் சாப்பிட்டதாக போலீஸாருக்கு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications