அறிவாலயம்: அதிமுக மீது வாசன் பாய்ச்சல்
சென்னை:
திமுகவுக்குச் சொந்தமான அண்ணா அறிவாலய நில விவகாரத்தை அதிமுக அரசு தேவையில்லாமல் அரசியலாக்கி வருகிறது என்று தமிழககாங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசுகூறுகிறது. இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதிக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசின் இந்த செயல் தேவையற்றது, அறிவாலய பிரச்சினையை அரசியலாக்கி வருகிறது. அரசின் செயல் அரசியல் உள்நோக்கம்கொண்டது.
அதிமுக அரசு மக்கள் நலனை மறந்து விட்டு பழிவாங்கும் நோக்கிலேயே தினசரி செயல்பட்டு வருகிறது.
மக்கள் வறுமையிலும், பல்வேறு பிரச்சினைகளிலும் உழன்று கொண்டிருக்கும் போது ரூ. 500 கோடி செலவில் ஆடம்பரமான தலைமைச்செயலகம் தேவையா என்பதை அரசு யோசிக்க வேண்டும் என்றார் அவர்.
மாநகராட்சி சிறப்புக் கூட்டம் ரத்து:
இந் நிலையில், அறிவாலய நில ஆக்கிரமிப்பு தொடர்பாக விவாதிக்க கூட்டப்பட இருந்த மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், விதிமுறைகளை மீறி அண்ணா அறிவாலயத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக விவாதித்து முடிவெடுக்க மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற இருந்தது.
இந் நிலையில் இப்பிரச்சினையில் தமிழக அரசுதலையிட்டு, திமுக அறக்கட்டளைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், நாளையசிறப்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கராத்தே.












Click it and Unblock the Notifications