செல்போன் லைவ் ரிலே மூலம் இளைஞர்களை பிடித்த பெண்கள் + போலீஸ் !
சென்னை:
ஈவ் டீசிங் செய்த இளைஞர்களை 2 பெண்களும், போலீஸாரும் சேர்ந்து 15 நிமிடம் ரோட்டில் துரத்திச் சென்றுபிடித்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள வங்கியில் பணியாற்றுபவர் ஜஹீரா. இவரும் இவரது தோழியும் காலை 9மணியளவில் பஸ் ஏறுவதற்காக பாரிமுனை பகுதியில் காத்திருந்தனர்.
அப்போது 5 பேர் கொண்ட ஒரு கும்பல் இவர்களை பார்த்து ஆபாசமாக பேச ஆரம்பித்தது. இதனால்அதிர்ச்சியடைந்த ஜஹீரா தன்னிடம் இருந்த செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார்.
ஜஹீரா போன் செய்ததைப் பார்த்து விட்ட இளைஞர்கள் அப்போது வந்த ஒரு பஸ்சில் ஏறித் தப்பினர்.
இதையும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்தார் ஜகீரா. அப்போது போலீசார், நீங்களும் பஸ்சில் ஏறிஅவர்களை தொடர்ந்து செல்லுங்கள், போலீஸ் வேன் வழியிலேயே வந்து அந்த பஸ்ஸை மடக்கும் என்றனர்.
இதையடுத்து ஜகீராவும் அவரது தோழியும் பஸ்சில் ஏறினர். பஸ் சென்று கொண்டிருக்கும் பாதையைபோலீஸாருக்கு லைவ் ரிலேவாக செல்போன் மூலம் சொல்லிக் கொண்டே வந்தார் ஜகீரா.
இதையடுத்து போலீசாரும் ரோந்து வேனில் அந்த பஸ்ஸைத் தொடர ஆரம்பித்தனர்.
அந்த பஸ் சிம்ப்சன் நிறுத்தம் அருகே சென்றபோது போலீஸ் ரோந்து வேன் பஸ்சை மறித்து நின்றது. போலீஸ்வேனைப் பார்த்ததும் 5 பேரும் தப்பி ஓட யன்றனர். ஆனால் மணி என்பவனை மட்டும் போலீஸார் பிடித்தனர்.
மற்ற 4 பேரும் ஒடி விட்டனர். மணியை ரோட்டில் வைத்து போலீசார் புரட்டி எடுத்தனர். இதையடுத்துதப்பியோடிவர்களின் பெயர், முகவரிகளை போலீசிடம் சொன்னான் மணி.
இதைத் தொடர்ந்து அந்த நால்வரின் வீடுகளுக்கும் சென்ற போலீஸ் படை அவர்களைக் கைது செய்தது.
ஈவ் டீசிங் செய்த இளைஞர்களைப் பிடிக்க வகை செய்த பெண்ணின் சமயோஜிதத்தையும் தைரியத்தையும்போலீஸார் வெகுவாகப் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications