வாக்காளர் பட்டியல் குளறுபடி: ஆகஸ்டி-ல் அறிக்கை
சென்னை:
மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக நடைபெறும்விசாரணையின் அறிக்கை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குப் பிறகு மத்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணையை நடத்தி வரும் கேரளத் தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ்
நிருபர்களிடம் கூறியதாவது:
அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் விடுபட்டதாகவும், நீக்கப்பட்டதாகவும்இதுவரை சுமார் 40,000 பேர் புகார் கொடுத்துள்ளனர்.
அப் புகார்களின் அடிப்படையில், பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள், அதற்குக் காரணமானவர்கள்,அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், எதிர்காலத்தில் இத்தகைய செயல்கள் நடைபெறாமல்தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடத்தி வருகிறேன்.
ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் விசாரணையை நடத்தி முடித்து விடுவேன். அதன்பிறகு விசாரணை அறிக்கையை மத்தியதேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications