மதுரை நீதிமன்றம்: 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்னை வருகை
சென்னை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிரச்சினையைத் தீர்க்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாலகிருஷ்ணன், ஏ.ஆர்.லட்சுமணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையுடன் திருச்சி மற்றும் மத்திய மாவட் டங்களை இணைப்பது குறித்து சென்னைவழக்கறிஞர்களுக்கும், மதுரை வழக்கறிஞர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை மற்றும் மதுரை வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்து விட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிஆர்.சி.லகோதியிடம் விளக்க இரு தரப்பினரும் தனித்தனியே டெல்லி சென்றனர்.
இந் நிலையில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர உச்ச நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிலட்சுமணன் ஆகிய இருவரையும் தலைமை நீதிபதி ஆர்.சி. லகோதி நியமித்துள்ளார். இவர்கள் சென்னைவழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசுகிறார்கள்.
மேலும் வேலை நிறுத்தத்தை உடனே கைவிடும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில் இரு தரப்பினரையும் அழைத்து பேசும்படி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி. லகோதி கூறினார். அதன்படி நாளை இரு தரப்புவழக்கறிஞர்களுடன் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.












Click it and Unblock the Notifications