7,000 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை
சென்னை:
தமிழகத்தில் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற 7,000 பேர்ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 5,500 பட்டதாரி ஆசிரியர்களும் 1,500முதுநிலைப் பட்டதாரிகளும் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என்று கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.
இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்குத் தொகுப்பு ஊதியமாக ரூ. 4,000, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குதொகுப்பூதியமாக ரூ. 4,500 வழங்கப்படும்.
தொகுப்பு ஊதியம் பெற்று 5 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படும் வாய்ப்பு உள்ளது.அவ்வாறு நிரந்தரமாக்கப்படும்போது, நிரந்தர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அவர்கள் பெறுவார்கள்.












Click it and Unblock the Notifications