ஜெ. நாளை குருவாயூர் பயணம்
பாலக்காடு:
முதல்வர் ஜெயலலிதா நாளை குருவாயூர் கோவிலுக்குச் செல்கிறார்.
கேரள ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கரின் ஆலோசனையின்படி வழக்குகளில் இருந்து தப்பஇந்தக் கோவிலுக்கு யானையை தானம் தந்தார் ஜெயலலிதா. பின்னர் தேர்தலில் வென்றவுடன் தங்கக்குடத்தை காணிக்கையாகத் தந்தார்.
பணிக்கரின் யோசனைப்படியே பெரும்பாலான முடிவுகளை இப்போதெல்லாம் ஜெயலலிதா எடுத்துவருகிறார்.
இந் நிலையில் அவரது ஆலோசனையின்படி குருவாயூர் கோவிலில் பால் பாயசம் செய்து சுவாமிக்குநைவேத்யம் செய்ய ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
இதற்காக நாளை (7ம் தேதி) ஜெயலலிதா குருவாயூர் செல்கிறார். தனி விமானம் மூலம் கோவைக்குச்சென்று சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் குருவாயூர் செல்வார் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் கொச்சிக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் குருவாயூர் வருவார்என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பயணம் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், முதல்வரின் பயணத் திட்டம் குறித்து அரசுஎந்தத் தகவலையும் தெரிவிக்க மறுக்கிறது.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி குருவாயூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர்இறங்குவதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுடன் தோழி சசிகலாவும் செல்லக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications