லாலுவிடம் நிதி கேட்கும் ப.சிதம்பரம்
சென்னை:
எம்.பிக்கள், மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது தொகுதிகளின் திட்டங்களுக்காகவும் தங்களதுதுறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கக் கோரி ப.சிதம்பரத்தை கெஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில்,திருச்சி-காரைக்குடி-மானாமதுரை அகல ரயில் பாதைத் திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கி உதவுமாறு ரயில்வேஅமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை தொகுதியில் அடங்கிய காரைக்குடி-மானாமதுரை அகல ரயில் பாதைத் திட்டம் ரயில்வே துறையால்மிக, மிக அலட்சியமாக, மிக மெதுவாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இதனால், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சியினரின் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்ப.சிதம்பரம்.
5 முறை சிவகங்கை தொகுதியின் எம்.பியாக இருந்தபோதிலும், இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் தவறி விட்டதாகப.சிதம்பரம் மீது புகார் கூறப்படுகிறது.
இந் நிலையில் மீண்டும் எம்.பியாகி நிதியமைச்சராகவும் ஆகிவிட்டார் சிதம்பரம்.
இந் நிலையில் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை இந்தியா என்ற ஜன்னலின் வழியாகசிவகங்கையை பார்த்து வந்தேன். இனிமேல் சிவகங்கை வழியாக இந்தியாவைப் பார்க்கப் போகிறேன்.
திருச்சி-காரைக்குடி-மானாமதுரை அகல ரயில் பாதைத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்குமாறு லாலு பிரசாத்திடம்கோரிக்கை வைத்துள்ளேன். இதுதொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் பலமுறை அவரிடம் பேசியுள்ளேன்.
2001ம் ஆண்டிலேயே இந்த திட்டம் நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மொத்தமே ரூ. 1 கோடிதான். எனவேதான் திட்டம் நிறைவு பெறாமல் உள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வாரியத் தலைவருக்கும், ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதங்கள்அனுப்பியுள்ளேன். ரயில்வே பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படும் என நம்புகிறேன் என்றுகூறியுள்ளார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications