விரைவில் ஆட்சி மாறும்: மாஜி திமுக அமைச்சர்
சேலம்:
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சரும், சேலம் திமுக மாநாட்டுக் குழுத்தலைவருமான வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் முத்து விழா, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி விழா மற்றும் சிறப்பு மாநாடுஆகியவை சேலத்தில் அடுத்த மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.
இந்த மாநாடு சேலம் அருகே உள்ள குமரன்குடி என்றஇடத்தில் உள்ள மலை அடிவாரத்தில் நடக்கவுள்ளது.இதற்காக பல நூறு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சமப்படுத்தி வருகிறது சேலம் மாவட்ட திமுக.
இந்த ஏற்பாடுகள் வீரபாண்டி ஆறுமுகத்தின் நேரடி கண்காணிப்பில் செய்யப்பட்டு வருகின்றன.
இன்று குமரன்குடி பகுதியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த மாநாட்டுக்குப் பின்னர் தமிழகத்தில்ஆட்சி மாற்றம் ஏற்படும்.
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக சேலம் மாநாடு அமையும். சுமார் 25 லட்சம் பேர் இந்தமாநாட்டில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications