தமிழகத்தில் இனி 1ம் வகுப்பு முதல் ஆங்கிலம்
சென்னை:
தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஏழை மாணவர்களும் போட்டி போடும் வகையிலஅரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தக் கல்வியாண்டு முதல் 45,000 அரசுப் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதலே ஆங்கிலம்கற்பிக்கப்பட்டவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 3ம் வகுப்பில் இருந்து தான் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. தனியார்பள்ளிகளில் கிண்டர் கார்டன் எனப்படும் ஆரம்பக் கல்வியிலேயே ஆங்கிலம் சொல்லித்தரப்படுகிறது.
இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலக் கல்வியில் பின் தங்கிவிடுகின்றனர். ஆங்கிலத்தில்உரையாடுவது, ஆங்கிலத்தில் எழுதுவது ஆகியவற்றில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டிபோட முடியாமல் பின் தள்ளப்படுகின்றனர்.
மாறி வரும் சமூக, பொருளாதார சூழலில், வேலைக்காக இளம் தலைமுறையினர் கடும் போட்டியைசந்தித்து வரும் நிலையில் ஆங்கிலப் புலமையில்லாத மாணவர்கள் திணறி வருகின்றன.
இதையடுத்து அரசுப் பள்ளிகளின் கல்வி முறையை மாற்ற அரசு முயற்சி எடுத்துள்ளது. அதன் முதல்படியாக 1ம் வகுப்பிலேயே ஆங்கிலத்தையும் சொல்லித் தர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனை இந்தக் கல்வியாண்டு முதலே அமலாக்கவும், அதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி தரவும்திட்டமிடப்பட்டுள்ளது. சில பள்ளிகள் இதனை ஏற்கனவே அமலாக்க ஆரம்பித்துவிட்டன.












Click it and Unblock the Notifications