மைக்ரோ பயலாஜி விடைத்தாளை திருத்திய ஆங்கில பேராசிரியர்கள்!!
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், நுண்ணுயிரியல் (மைக்ரோ பயாலஜி) விடைத் தாள்களை இரண்டுஆங்கிலப் பேராசிரியர்கள் திருத்திய வினோதம் நடந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பி.எஸ்.சி நுண்ணுயிரியியல் செமஸ்டர் தேர்வின்விடைத்தாள் திருத்தும் பணியில் சில ஆங்கில பேராசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக பரபரப்புப் புகார் எழுந்தது.
ஆனால், அப்படியேதும் நடக்கவில்லை என பல்கலைக்கழகம் மூடி மறைக்க முயன்றது. ஆனாலும் தொடர்விசாரணையில் தவறு நடந்திருப்பது உறுதியானது.
விடைத்தாள் திருத்தப்பட்ட 17 மாணவர்களும் முதலில் பாஸ் ஆனதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தவறுவெளியில் தெரிய வந்தவுடன் ஒரு மாணவரை மட்டும் ஒப்புக்கு பெயில் ஆக்கியது பல்கலைக்கழகம்.
இந் நிலையில் விவகாரம் பெரிதானதையடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டார் தையடுத்து பல்கலைக்கழகதுணைவேந்தர் பி.கே.பொன்னுச்சாமி.
இதில், இரு ஆங்கிலப் பேராசிரியர்கள் மைக்ரோ பயாலஜி விடைத் தாள்களைத் திருத்திய விவரம் உறுதியானது.
இதையடுத்து தவறு செய்த அந்த இரு ஆங்கில பேராசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகதேர்வுக் குழுவுக்கு பொன்னுசாமி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த இரு ஆசிரியர்களும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த விடைத்தாள்களையும் திருத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கவும், துணைவேந்தர் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தடை விதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் தனியார் கல்லூரியில் கடந்த 17 வருடங்களாக ஆங்கிலப் பேராசிரியராகப்பணியாற்றி வருபவர். மற்றொருவர் அரசுக் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவரது கல்வி அனுபவம் 37ஆண்டுகளாகும்.
இந்த ஆசிரியர்கள் தண்டிக்கப்பட்ட ஒரு பக்கம் இருக்க, இவர்களை விடைத்தாள் திருத்தச் சொன்னது யார்?,ஆங்கிலப் பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதை மைக்ரோ பயாலஜி துறை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டதுபோன்ற முக்கியமான கேள்விகளுக்கு மதுரை பல்கலைகழத்திடம் இருந்து உரிய பதில் இல்லை.
இதில் மேல் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிடுவதே பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்துக்குநல்லது.












Click it and Unblock the Notifications