மன்னிப்பு கேட்டது அண்ணா பல்கலைகழகம்
சென்னை:
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் 22 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது குறித்துஅண்ணா பல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
நுழைவுத் தேர்வில் 22 தவறான கேள்விகள் கேட்கப்பட்டது தொடர்பாக பல மாணவர்களும், அவர்களதுபெற்றோர்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதனால் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிங்தள்ளிப் போய்க்கொண்டுள்ளது.
இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி பிரபா ஆகியோர்முன் ஆஜரான அண்ணா பல்கலைக்கழக வழக்கறிஞர் மாசிலாமணி, இந்த விவகாரத்தில் அண்ணாபல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், கேள்வித் தாள்களை தயாரிப்பதிலும், அச்சடிப்பதிலும் அதி கவனமாக இருந்தது அண்ணாபல்கலைக்கழகம். அச்சடிப்பதில் ஏற்பட்ட சிறு தவறுகள் காரணமாக சில கேள்விகள் தவறாகி விட்டன.
இந்தத் தவறுகளுக்காக உயர் நீதிமன்றத்திடமும், மாணவ சமுதாயத்திடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
இதைத் தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications