தமிழகம்: அபாய அளவில் நிலத்தடி நீர் மட்டம்
டெல்லி:
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த 20 ஆண்டுகளில்அபாயகரமான அளவுக்குக் குறைந்து போயுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதுமே கடந்த பல ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து வருவதால் வறட்சிதலைவிரித்தாடி வருகிறது. இந் நிலையில் நிலத்தடி நீரை பயன்படுத்துவதும் பல மடங்கு அதிகமாகி,நீரின் அளவு அபாயகரமான அளவுக்குக் குறைந்து வருகிறது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்தியுள்ள ஆய்வின்படி 1983ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் 20 மாநிலங்களில் உள்ள 306 மாவட்டங்களில் நிலத்தடி நீரின் மட்டம்4 மீட்டர் உள்ளே போய்விட்டது தெரியவந்துள்ளது.
நிலைமை மிக மோசமாக இருப்பது உத்தரப் பிரதேசத்தில் தான். இங்குள்ள 42 மாவட்டங்களிலும்,மத்தியப் பிரதேசத்தில் 37 மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் 30 மாவட்டங்களிலும்,மகாராஷ்டிரத்தின் 27 நிலத்தடி நீர் மட்டம் 4 அடிக்கும் அதிகமாகவே கீழே போய்விட்டது.
அடுத்த நிலையில் ஒரிஸ்ஸா (24 மாவட்டங்கள்), தமிழகம் (22 மாவட்டங்கள்), ஆந்திரா (21மாவட்டங்கள்), கர்நாடகம் (20 மாவட்டங்கள்), குஜராத் (18 மாவட்டங்கள்), பஞ்சாப் (13மாவட்டங்கள்), ஹரியாணா (22 மாவட்டங்கள்) ஆகியவை உள்ளன.
இந்த மாவட்டங்களில் நீர் மட்டம் 4 மீட்டர் அளவுக்கு கீழே போய்விட்டது.












Click it and Unblock the Notifications