பெற்ற குழந்தையை கடைவீதியில் விற்க முயன்ற தாய் !!

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

கணவரும், பெற்றோர்களும் கைவிட்டு விட்டதால் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்ட இளம் பெண், தனது 2வார குழந்தையை கடைவீதியில் விற்க முயன்றார். இதையடுத்து அவரை பொது மக்கள் போலீஸாரிடம்ஒப்படைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பிரியா (25). இவர்களுக்கு 5 வயதுமகன் உள்ளான். இந் நிலையில், கர்ப்பிணியாக இருந்த பிரியாவை அவரது கணவர் குமார் சமீபத்தில் கைவிட்டுவிட்டு வேலூரில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

கணவர் கைவிட்டதால், பெற்றோரின் உதவியை நாடினார் பிரியா. ஆனால் அவர்களும் ஏற்க மறுத்து விட்டனர்.இந்த நலையில், பிரியாவுக்கு 2 வாரங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

கணவர் கைவிட்ட நிலையில், கையில் பணமில்லாமல் வறுமையில் வாடிய பிரியாவால் தனது இருகுழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை, என்ன செய்வது பரிதவித்த பிரியா, குழந்தையுடன் வேலூருக்குவந்தார்.

பஸ் நிலையம் அருகே கடைவீதிக்குச் சென்று அங்குள்ள கடைகாரர்களை அணுகி குழந்தையைப் பெற்றுக்கொண்டு ஏதாவது பணம் தருமாறு கேட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வணிகர்கள் அவரை வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இச் சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஈரோட்டில் பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தை ரூ. 4,000க்கு ஏலத்தில் விடப்பட்டது. வறுமைகாரணமாகவே அந்தத் தாயும் தனது குழந்தையை ஏலத்தில் விட்டார். ஏலம் ரூ. 500ல் ஆரம்பித்து ரூ. 4,000ல்முடிந்துள்ளது. ஏற்கனவே அந்தத் தாய் தனது முதல் குழந்தையையும் விற்றவர் என்றும் விசாரணையில்தெரியவந்தது.

இந் நிலையில் வே

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+