Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்புக்கு தடை இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்பு விழாவைத் தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றதலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி திட்டவட்டமாகக் கூறி விட்டார்.

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றக் கிளை திறப்பு விழா தொடர்பான குடியரசுத் தலைவர் அறிவிக்கைஅரசியல் அமைப்புக்கு புறம்பானது என்று கூறி அதை தடை செய்யக் கோரி சுப்ரமணியம் என்ற வழக்கறிஞர்உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போதுமனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபாலன், குடியரசுத் தலைவரின் அறிவிக்கை அரசியல்அமைப்புக்குப் புறம்பானது. எனவே மதுரை கிளை தொடர்பான குடியரசுத் தலைவரின் அறிவிக்கையை ரத்துசெய்ய வேண்டும்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிபதி பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந் நிலையில்மதுரை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை அனுப்பினால் இங்கு வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படும்.

எனவே மதுரை நீதிமன்ற கிளை திறப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் வாதாடினார். இதை ஏற்க மறுத்ததலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, குடியரசுத் தலைவரின் அறிவிக்கை சட்டப்பூர்வமாக உள்ளது. எனவே அதற்குத்தடை விதிக்க முடியாது. திட்டமிட்டபடி 24ம் தேதி திறப்பு விழா நடைபெறும்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களின் நிலைமை குறித்து மத்திய, மாநில அரசுகள் இன்று பிற்பகலுக்குள்நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+