நீர்வரத்து: மேட்டூருக்கு அதிகரிப்பு; கபினிக்கு குறைவு
சேலம்:
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இருப்பினும் கபினி அணைக்கு வரும் நீரின்அளவு குறைந்து விட்டது.
கர்நாடகத்தின் குடகு மாவட்டம் மற்றும் கபினி அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்லமழை பெய்து வந்தது. இதனால் கபினி அணையிலிருந்து கணிசமான அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் நேற்று முதல் மழைப் பொழிவு குறைந்து விட்டதால் கபினி அணையிலிருந்து மேட்டூருக்குவிநாடிக்கு 3,000 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.
அதேசமயம், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர்அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது.
நேற்று இரவு வரை விநாடிக்கு 11,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது விநாடிக்கு 14,554கன அடியாக உயர்ந்தது. தற்போது அணையில் 67 அடி நீர் இருப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications