ஆளுநர்கள் நீக்கம்: வழக்கை ஏற்றது உச்ச நீதிமன்றம்
டெல்லி:
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்சைச் சேர்ந்த 4 மாநில ஆளுநர்களை மத்திய அரசு பதவி நீக்கியதை எதிர்த்துதாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், உத்தரப் பிரதேச ஆளுநர் விஷ்ணுகாந்த் சாஸ்திரி, குஜராத்ஆளுநர் கைலாஷ்பதி ராவ் மிஸ்ரா, ஹரியாணா ஆளுநர் பாபு பரமானந்த், கோவா ஆளுநர் கிதார்நாத் சர்மா ஆகியோரை பதவி நீக்கம் செய்தது.
இதை எதிர்த்து பா.ஜ.க. முன்னாள் எம்.பி சிங்கல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி லகோத்தி தலைமையிலான மூன்று நீதிபதிகள் பெஞ்ச்விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந் நிலையில் மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மாநில ஆளுநர்களைநீக்க மத்திய அரசுக்கு அரசியல் சட்டரீதியில் முழு உரிமை உண்டு என்றார்.
மத்திய அமைச்சரை கைது செய்ய உத்தரவு:
இதற்கிடையே மத்திய நிலக்கரித்துறை அமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபுசோரேனை, 1970ல் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்ய ஜார்க்கண்ட் மாநில செசன்ஸ்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள்ராஜ்யசபாவில் பிரச்சனை கிளப்பின. இதனால் கூச்சல்-குழப்பம் ஏற்படவே ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
குற்றப் பின்னணி உடைய அமைச்சர்களை நீக்க வேண்டும் என பா.ஜ.க. கோரி வருவதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications