தீயில் கருகியமுத்திரைத் தாள்கள்: சதியா?
புதுக்கோட்டை - வேலூர்:
தமிழகத்தை போலி முத்திரைத் தாள்கள் விவகாரம் ஆட்டிப் படைத்து வரும் நிலையில் இன்று புதுக்கோட்டையில்அரசு அச்சக கிட்டங்கியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தாள்கள் தீயில் கருகி சாம்பலாயின.
புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே அரசு அச்சகம் உள்ளது. அதற்கு அருகிலேயே அச்சக கிட்டங்கியும் உள்ளது.இன்று காலை 6 மணியளவில் இந்த கிட்டங்கியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயில்கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சம்
ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தாள்கள் தீயில் கருகி சாம்பலாயின. போலி முத்திரைத் தாள் மோசடி வழக்குவிஸ்வரூபமெடுத்து தமிழகத்தில் அடுத்தடுத்து பலர் கைதாகி வரும் நேரத்தில் புதுக்கோட்டை அரசு அச்சககிட்டங்கியில் பல லட்சம் மதிப்புள்ள முத்திரைத் தாள்கள் தீயில் கருகி சாம்பலாயுள்ளது -ப-ர-ப-ரப்-பை-ஏற்-ப-டுத்-தி-யுள்-ள-து.
அங்கு போலி முத்திரைத் தாள்களும் கலந்து வைக்கப்பட்டிக்கலாம் என்றும், அதை யாரும் கண்டுபிடித்துவிடாதபடிதீ வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வேலூரில் சிபிஐ முகாம்:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல பத்-தி-ரப்-ப-தி-வு ஏஜெண்ட்களுக்குதொடர்பிருப்பதாக வந்த தகவலை அடுத்து சிபிஐ அதிகாரிகள் வேலூரில் முகாமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 1998 முதல் 2001ம் ஆண்டு வரை ரூ.3,000 கோடி அளவுக்கு முத்திரைத்தாள் மோசடி நடந்துஇருப்பதையும், வேலூர் மாவட்டம்தான் முத்திரைத்தாள் மோசடியின் மையமாக இருந்துள்ளதையும் சிபிஐஅதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று வேலூரில் முகாமிட்டுள்ளது.
வாணியம்பாடியில் இருந்து அதிகளவில் போலி முத்திரைத்தாள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இங்கிருந்து வேலூர், காட்பாடி, ஆம்பூர், குடியாத்தம், அரக்கோணம் ஆகிய ஊர்களுக்கும், கடலூர், விழுப்புரம்,சேலம், தர்மபுரி மாவட் டங்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்-ள பத்திரப்பதிவு ஏஜெண்டுகளில் பலர் லட்-சக்-கணக்கில் சொத்து சேர்த்து இருப்பதை போலீசார்கண்டு பிடித்து உள்ளனர். பலர் பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி இருப்பதும் -தெ-ரி-ய-வந்-து-ள்-ளது.
சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக கண்காணிக்கத் தொடங்கியதும் இ-வ-ர்-க-ளில் பலர் தலைமறைவாகி விட்ட னர்.மே-லும் --ப-ல பத்திரப்பதிவு ஏஜெண்டுகள் எந்த நேரத்திலும் பிடிபடலாம் என்ற பயத்தில் உள்ளனர்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications