கட்டியணைத்து இறந்து கிடந்த இளம் பிஞ்சுகள்
கும்பகோணம்:
பள்ளியில் இறந்து கிடந்த குழந்தைகளில் பலரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி இறந்து கிடந்தனர்.
தீ நாலாபுரமும் சுற்றிப் பரவியதால், என்ன செய்வது என்று தெரியாத அந்த பிஞ்சுகள், கதறியபடி ஒருவரை ஒருவர்பிடித்துக் கொண்டு பலியாகியுள்ளன.
ஒரு குழந்தை மட்டுமே நடக்கும் அளவுக்கு மிகக் குறுகலான படிக்கட்டுகள் தான் பெரும்பாலான உயிரைக்குடித்துள்ளது. அந்தப் படிக்கட்டுகள் முழுவதும் குழந்தைகளின் பைகளும், புத்தகங்களும், அவர்களுக்கு மிகப்பிடித்தமான பல வண்ண பென்சில் பாக்ஸ்கம் எரிந்தும், கருகியும் சிதறிக் கிடந்தன.
குழந்தைகளின் பிணக் குவியலுக்கு மத்தியில் அங்கங்கே அவர்களது டிபன் பாக்ஸ்கள் கருகிப் போய், இந்தச்சாவுகளை நேரில் கண்டதன் மெளன சாட்சிகளாக சிதறிக் கிடந்தன.
பெரும்பாலான பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளின் உடலை பார்க்கக் கூட தெம்பில்லை. பயந்து பயந்து வந்துஉடலைப் பார்த்து, அது தங்கள் குழந்தை என்று உறுதியானவுடன் அவர்கள் முகத்தில் வெளியான மிரட்சியும்,ஆதங்கமும், வெடித்து வெளிவந்த கதறல் ஒலியும் அதை நேரில் பார்த்தவர்களை நிலை குலைய வைத்துவிட்டன.
எரிந்த உடல்களை போலீசார் ஒவ்வொன்றாக எடுத்து ஸ்ட்ரெச்சர்களில் வைத்தபோது, பல போலீசாரின் கண்களில்கண்ணீர். உடலின் எந்தப் பகுதியைப் பிடித்துத் தூக்குவது என்று தெரியாத அளவுக்கு எல்லா பகுதியும் எரிந்துபோய் இருந்தன பல உடல்கள்.
எரிந்த கூடுகளுக்கு மத்தியில் ஏதாவது ஒரு உயிர் முனகிக் கொண்டு கிடக்கிறதா, அதைக் காப்பாற்றிவிடலாம் என்றஆர்வத்தில் தீயணைப்புப் படையினரும் போலீசாரும் பெற்றோரும் அலை பாயந்து கொண்டிருந்தனர்.
உடல்கள் ஒப்படைக்கப்பட்ட பெற்றோர்கள், அவர்களை வீடுகளுக்கு கைகளில் ஏந்திக் கொண்டு, அரற்றியவாரேசெல்வதைப் பார்க்க முடியாமல் பல நிருபர்கள் கண்ணீர் விட்டனர். பல பெற்றோர்கள் குழந்தையின் உடலைப்பார்த்தவுடன் மயங்கினர். உடல் ஒப்படைக்கப்பட்டபோது அதைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல்சாலைகளிலேயே சரிந்தனர்.
பேரக் குழந்தைகளின் நிலைமை என்னவென்று புரியாமல் முதிய பாட்டிகள், தாத்தாக்கள் கூட்ட நெரிசலுக்குமத்தியில் போவோர் வருவோரிடம் எல்லாம் விவரம் கேட்டு அழுததை காண சகிக்க முடியவில்லை.
உடல் முழுவதும் வெந்து போன பல குழந்தைகள் மருத்துவமனைகளில் அம்மா, அப்பா என்று முனகிக்கொண்டிருக்க, அவர்களை மடியில் போட்டுக் கொண்டு கதறிக் கொண்டிருக்கின்றனர் பல பெற்றோர்கள்.
உடல்கள் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளின் வெளியே குழந்தைகளின் உறவினர்கள் ஒருவரை ஒருவர்கட்டியணைத்து அழுதது வாழ்வில் மறக்க முடியாத சோகம்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications