கட்டியணைத்து இறந்து கிடந்த இளம் பிஞ்சுகள்
கும்பகோணம்:
பள்ளியில் இறந்து கிடந்த குழந்தைகளில் பலரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி இறந்து கிடந்தனர்.
தீ நாலாபுரமும் சுற்றிப் பரவியதால், என்ன செய்வது என்று தெரியாத அந்த பிஞ்சுகள், கதறியபடி ஒருவரை ஒருவர்பிடித்துக் கொண்டு பலியாகியுள்ளன.
ஒரு குழந்தை மட்டுமே நடக்கும் அளவுக்கு மிகக் குறுகலான படிக்கட்டுகள் தான் பெரும்பாலான உயிரைக்குடித்துள்ளது. அந்தப் படிக்கட்டுகள் முழுவதும் குழந்தைகளின் பைகளும், புத்தகங்களும், அவர்களுக்கு மிகப்பிடித்தமான பல வண்ண பென்சில் பாக்ஸ்கம் எரிந்தும், கருகியும் சிதறிக் கிடந்தன.
குழந்தைகளின் பிணக் குவியலுக்கு மத்தியில் அங்கங்கே அவர்களது டிபன் பாக்ஸ்கள் கருகிப் போய், இந்தச்சாவுகளை நேரில் கண்டதன் மெளன சாட்சிகளாக சிதறிக் கிடந்தன.
பெரும்பாலான பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளின் உடலை பார்க்கக் கூட தெம்பில்லை. பயந்து பயந்து வந்துஉடலைப் பார்த்து, அது தங்கள் குழந்தை என்று உறுதியானவுடன் அவர்கள் முகத்தில் வெளியான மிரட்சியும்,ஆதங்கமும், வெடித்து வெளிவந்த கதறல் ஒலியும் அதை நேரில் பார்த்தவர்களை நிலை குலைய வைத்துவிட்டன.
எரிந்த உடல்களை போலீசார் ஒவ்வொன்றாக எடுத்து ஸ்ட்ரெச்சர்களில் வைத்தபோது, பல போலீசாரின் கண்களில்கண்ணீர். உடலின் எந்தப் பகுதியைப் பிடித்துத் தூக்குவது என்று தெரியாத அளவுக்கு எல்லா பகுதியும் எரிந்துபோய் இருந்தன பல உடல்கள்.
எரிந்த கூடுகளுக்கு மத்தியில் ஏதாவது ஒரு உயிர் முனகிக் கொண்டு கிடக்கிறதா, அதைக் காப்பாற்றிவிடலாம் என்றஆர்வத்தில் தீயணைப்புப் படையினரும் போலீசாரும் பெற்றோரும் அலை பாயந்து கொண்டிருந்தனர்.
உடல்கள் ஒப்படைக்கப்பட்ட பெற்றோர்கள், அவர்களை வீடுகளுக்கு கைகளில் ஏந்திக் கொண்டு, அரற்றியவாரேசெல்வதைப் பார்க்க முடியாமல் பல நிருபர்கள் கண்ணீர் விட்டனர். பல பெற்றோர்கள் குழந்தையின் உடலைப்பார்த்தவுடன் மயங்கினர். உடல் ஒப்படைக்கப்பட்டபோது அதைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல்சாலைகளிலேயே சரிந்தனர்.
பேரக் குழந்தைகளின் நிலைமை என்னவென்று புரியாமல் முதிய பாட்டிகள், தாத்தாக்கள் கூட்ட நெரிசலுக்குமத்தியில் போவோர் வருவோரிடம் எல்லாம் விவரம் கேட்டு அழுததை காண சகிக்க முடியவில்லை.
உடல் முழுவதும் வெந்து போன பல குழந்தைகள் மருத்துவமனைகளில் அம்மா, அப்பா என்று முனகிக்கொண்டிருக்க, அவர்களை மடியில் போட்டுக் கொண்டு கதறிக் கொண்டிருக்கின்றனர் பல பெற்றோர்கள்.
உடல்கள் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளின் வெளியே குழந்தைகளின் உறவினர்கள் ஒருவரை ஒருவர்கட்டியணைத்து அழுதது வாழ்வில் மறக்க முடியாத சோகம்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications