ஓடி வந்த சென்னை, வேலூர், கோவை டாக்டர்கள்
கும்பகோணம்:
கும்பகோணத்தில் இன்று 2வது நாளாக தொடர்ந்து மயான அமைதியும், சோகமும் நிலவி வருகிறது. தீவிரதீக்காயமடைந்துள்ள 19 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிருக்குப் போராடி வரும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனை, வேலூர் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை (சிஎம்சி) ஆகியவற்றைச் சேர்ந்த டாக்டர்கள்கும்பகோணம் விரைந்துள்ளனர்.
அதே போல கோவை போன்ற ஊர்களிலிருந்தும் ஏராளமான டாக்டர்கள் கும்பகோணம் விரைந்துள்ளனர்.
குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க கும்பகோணம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை, டாக்டர்கள்இல்லை. இதனால் தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், தமிழகத்திலேயே தீக்காயங்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கக் கூடிய வசதி சென்னை கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவனையிலும், வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலும் மட்டும்தான் உள்ளது. இதனால் அந்தமருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கும்பகோணம் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இரு ஊர்களிலிருந்தும் வந்துள்ள மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் உயிருக்குப் போராடி வரும்குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயம்பட்ட மாணவர்களைப் பார்க்கவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் ஏகப்பட்ட பேர்கும்பகோணம் வந்தவண்ணம் உள்ளதால், எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாகவும் சோக முகங்களாகவும்காட்சியளிக்கின்றன.
கும்பகோணம் முழுவதும் இன்றும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கிருஷ்ணா பள்ளியில் படித்து வந்த மாணவ, மாணவியரை வேறு பள்ளிகளில் சேர்க்க மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications