வாடிகனில் போப்பாண்டவர் சிறப்பு பிரார்த்தனை
வாடிகன் சிட்டி - லண்டன்:
கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்தில் பலியான குழந்தைகளுக்காக கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஆண்டவர்ஜான் பால் பிராத்தனை செய்தார்.
கும்பகோணத்தில் நடந்த துயரச் சம்பவம் இந்தியாவை மட்டுமல்லாது உலகையே குலுக்கி விட்டது. ஆல்ப்ஸ்மலைப்பகுதியில் ஓய்வெடுத்து வரும் போப் ஜான் பாலுக்கு கும்பகோணம் விபத்து தொடர்பான தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கேட்டதும் அதிர்ந்த அவர், இறந்த குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்துள்ளார்.இத்தகவலை போப் ஜான் பாலின் செய்தித் தொடர்பாளர் ஜோக்கின் நிவர்ரோ வால்ஸ் கூறியதாக வாட்டிகன் நகரவானொலி தெரிவித்துள்ளது.
இதேபோல, கும்பகோணம் சம்பவம் குறித்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், இளம் குழந்தைகள்பலியாகியுள்ள சம்பவம் மிகுந்த துயரமானது என்றும் இங்கிலாந்து அமைச்சர் மைக் ஓ பிரையன் லண்டனில்தெரிவித்தார்.
வங்கதேச அதிபர் ஜலாலூதீன் அகமதும், பிரதமர் பேகம் கலீதா ஜியாவும் இச் சம்பவம் குறித்துஅதிர்ச்சியைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு அனுப்பியுள்ள செய்தியில், இளம் பிஞ்சுகள் தீக்குஇரையானது மிக துரதிஷ்டவசமான சம்பவம் என அவர்கள் கூறியுள்ளனர்.
மறைந்த குழந்தைகளுக்காக பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications