For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

54 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் பெற்ற பள்ளி

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

தீவிபத்தில் சிக்கி பல உயிர்களைப் பழிவாங்கியுள்ள கும்பகோணம் கிருஷ்ணா உயர்நிலைப்பள்ளி கடந்த 1950ம்ஆண்டு அங்கீகாரம் பெற்ற பள்ளியாகும்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா உயர் நிலைப்பள்ளி கும்பகோணத்தில் பிரபலமானபள்ளிகளில் ஒன்று. கடந்த 1950ம் ஆண்டு இந்தப் பள்ளிக்கு கல்வித்துறை நிரந்தர அங்கீகாரம் வழங்கியது.

முதலில் 2 மாடிகளுடன் செயல்பட்டு வந்த இப்பள்ளி, பின்னர் சரஸ்வதி நர்சரிப் பள்ளியை தொடங்கியது. ஆனால்நர்சரிப் பள்ளிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டாமல், மொட்டை மாடிக்கு மேல் கூரையை வேய்ந்து அதில்வகுப்பறைகள் அமைத்துள்ளனர்.

இந்தப் பள்ளிக்கு முறையான அங்கீகாரம் இருந்தாலும் கூட பள்ளிக் கூடத்தில் அடிப்படை வசதிகள் எதுவும்இல்லை என்பது வேதனைக்குரியது. மைதானம் இல்லை, போதிய கழிப்பறை வசதி இல்லை, பள்ளிக் கூடத்திற்குஒரே ஒரு நுழைவாசல்தான், அதுவும்கூட மிகவும் குறுகியது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், தகுதிச் சான்றிதழ் பெறப்பட்ட பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தஎங்களுக்கு அனுமதி இல்லை. இந்தத் தகுதிச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அங்கீகாரம் பெற்றபொறியாளர்கள்தான் வழங்குகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

எப்படியோ, ஒட்டுமொத்தமாக பல இளம் பிஞ்சுகளை அழித்து விட்டார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X