வேலூர்: சாலை விபத்தில் 14 பேர் மரணம்
வேலூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தலபட்டு அருகே பஸ்சுடன், டயோடா குவாலிஸ் வேன் நேருக்கு நேர்மோதியதில் வேனில் பயணம் செய்த நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த 14 பேர் பலி பலியாயினர்.
நாகப்பட்டனத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் ஜெயின் என்பவரது குடும்பத்தினரும், இவரது இரு உறவினர்களின்குடும்பத்தினரும் குவாலிஸ் வேனில் திருப்பதி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தில் மொத்தம் 17பேர் இருந்தனர்.
வேலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள, ஆந்திராவின் புத்தல்பட்டு என்ற இடத்தை வேன் நெருங்கியபோது எதிரேவந்த பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் வேன் ஓட்டுநர் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இரண்டு குழந்தைகளும் ஒருபெண்ணும் பலத்த காயங்களுடன் சித்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications