Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயிர் தப்பியும் பய பீதியில் குழந்தைகள் !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோர தீவிபத்திலிருந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பிய சில குழந்தைகள் தீயின் கோரத்தை நேரில் பார்த்தஅதிர்ச்சியிலிருந்தும், அதன் பயத்திலிருந்தும் இன்னும் மீள முடியாமல் உறைந்துள்ளனர்.

தீயின் கோர தாண்டவத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் விஜய் (8 வயது) மற்றும் கெளசல்யா (7வயது). இருவரும் விபத்தில் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு மேல் சிகிச்சைஅளிக்கப்பட வேண்டியுள்ளதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இருவரும் உயிர் தப்பினாலும் அவர்கள் மனதில் தீவிபத்தின் பயம் இன்னும் உறைந்துள்ளது. விஜய் எப்போதுபார்த்தாலும் தீ, தீ என்று முனகிக் கொண்டிருக்கிறான். அவனது நிலையைப் பார்த்து தாய் விஜயலட்சுமி கண்களில்தாரை தாரையாக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்.

இதேபோல கெளசல்யாவும் தீவிபத்தின் பீதியிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இதில் கொடுமைஎன்னவென்றால் தீவிபத்து ஏற்பட்டபோது, அவளது ஆசிரியை பயப்பட வேண்டாம், சாதாரண தீதான், யாரும்ஓடாதீர்கள் என்று கூறியதைக் கேட்டு இருந்த இடத்திலேயே அமர்ந்திருக்கிறாள் கெளசல்யா. இதனால் காயம்பட்டுஉயிர் பிழைத்துள்ளாள்.

கெளசல்யாவின் இரு சகோதரிகளும் இதே பள்ளியில்தான் படித்து வந்தனர். அவர்கள் இருவரும்தீவிபத்தையடுத்து, ஆசிரியர்கள் தடுத்தும் கேட்காமல் கீழே இறங்கி ஓடி உயிர் தப்பியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+