அடிக்கடி அதிகாரிகள் மாற்றம் கூடாது: பிரதமர்
டெல்லி:
நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்வதைத்தவிர்க்குமாறு மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அதிகாரிகள், அமைச்சர்கள் மாற்றம் என்பது தமிழகத்தில் மிகவாடிக்கையான சாமாச்சாரமாகிவிட்ட நிலையில், பிரதமரின் இந்தக் கோரிக்கை மிகுந்தமுக்கியத்துவம் பெறுகிறது.
சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கவும், வளர்ச்சிப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளவும்அதிகாரிகள் தொடர்ந்து ஒரே பதவியில் சில காலம் நீடித்து இருப்பது தான் நல்லது என்று சிங் தனதுகடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அடிக்கடி இடமாற்றம் செய்யப்படும அதிகாரிகளின் செயல் திறனும் குறையும் என்று சுட்டிக்காட்டியுள்ள மன்மோகன் சிங், பொது நிதியைப் பயன்படுத்தும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுத்துறைகள் ஒளிவு, மறைவின்றி செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நிர்வாகம் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள பிரதமர், வறுமை ஒழிப்பு,கல்வியறிமின்மையை ஒழிப்பது, நோய்கள் ஒழிப்பு,
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள், பெண்கள், சிறுபான்மையினர்அனைவருக்கும் சம உரிமை கிடைக்கச் செய்வது போன்ற விஷயங்களுக்கு அரசுகள் முன்னுரிமைதந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது இந்த மூன்று பக்கக் கடிதத்தை அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மன்மோகன் சிங் அனுப்பிவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications