கும்பகோணம்: மத்திய அரசு ரூ. 1 கோடி உதவி
கும்பகோணம் - திருச்சி:
கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவராணம் வழங்குவதற்காக மத்திய அரசின்சார்பில் சார்பில் ரூ. 50 லட்சமும், இப் பகுதியில் உள்ள கூரைப் பள்ளிகளை அகற்றி புதிய பள்ளிகள் கட்ட ரூ. 50லட்சமும் வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங்கின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திஅறிவித்துள்ளார்.
(காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாக முதலில் தவறுதலாகக் கூறியிருந்தோம்.மன்னிக்கவும் !)
தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லவும், காயமடைந்த குழந்தைகளைசந்திக்கவும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று கும்பகோணம் சென்றார்.
இன்று பிற்பகலில் திருச்சி வந்த சோனியா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பெட்ரோலிய அமைச்சர் மணிசங்கரஅய்யர், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனுடன் கும்பகோணம் சென்றார்.
முதலில் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்த்த சோனியா, அவர்களின்பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். குழந்தைகளின் கைகளைப் பிடித்து கண் கலங்கியபடி சோனியாபேசினார். அப்போது அக் குழந்தைகளின் பெற்றோர் கதறி அழுதனர்.
குழந்தைகள் விரைவில் உடல் நலம் தேற மருத்துவமனையிலேயே அவர்களது பெற்றோருடன் சோனியா காந்திபிரார்த்தனையும் நடத்தினார்.
இதையடுத்து குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலரையும் அவர் சந்தித்தார். அப்போது அவர்கள் கதறி அழ,கண்கலங்கி நின்ற சோனியா, என்னால் உங்களுக்கு எந்த வார்த்தைகளும் சொல்லி ஆறுதல்படுத்திவிட முடியாது.உங்கள் வலிகளை நான் நன்றாக அறிந்திருக்கிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து தீ விபத்து நடந்த பள்ளியையும் பார்வையிட்ட சோனியா, அங்கு செய்தியாளர்களிடம்பேசுகையில், இந்த சம்பவம் நடந்திருக்கவே கூடாத ஒன்று. பாதிக்கப்பட்டவர்களின் மனதை தேற்ற கடவுளைபிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவியைஅளிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ரூ. 50 லட்சம் செலவில் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கீற்றுக் கொட்டகை பள்ளிகளைமேம்படுத்தவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நடந்தவுடன் பொது மக்கள் பலரும் தீக்குள் நுழைந்து குழந்தைகளை மீட்கும் நடவடிக்கைகளில்ஈடுபட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். அந்த மா மனிதர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அதே போல மாவட்ட கலெக்டர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தனது அதிகாரிகளுடன் இங்கேயே முகாமிட்டுவேண்டிய நிவாரணப் பணிகளையும், சரியான நேரத்தில் மீட்புப் பணிகளையும் ஒருங்கிணைத்துள்ளார். அவருக்குஎன் பாராட்டுக்கள். நிலைமையை அவர் மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார் என்றார் சோனியா.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications