ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு கோரி வழக்கு
சென்னை:
கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கஉத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்ப்டடுள்ளது. இந்த மனு இன்றுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரகதிரவன் என்பவர் 2 மனுக்களை தாக்கல் செய்தார். இறந்தகுழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடும், காயமடைந்த குழந்தைகளின் குடும்பங்களுக்குக்கூடுதல் நஷ்டஈடும் வழங்க வேண்டும் என்று ஒரு மனுவும்.
கீற்றுக் கூரைகளில் அமைந்துள்ள பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது; பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்குமுன்பாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை நேரடியாக ஆய்வு செய்யுமாறுஅதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார்.
இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மனு, நீதிபதி பாலசுப்ரமணியம், நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்குவந்தது. இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications