பழனி: ஒரே குடும்பத்தில் 5 பேர் விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வேகமாக வந்த லாரி, ஆட்டோ மீது மோதியதில் அதில் பயணம் செய்தஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
பழனியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது மனைவி செல்வி, மகள் காவ்யா, மாமியார் தங்கம்மாள்,மனைவியின் அக்கா ருக்மணி, உறவினர் சாந்தா ஆகியோருடன் ஆட்டோவில் கொடைக்கானல் அருகே உள்ளவிலங்கியப்பர் கோவிலுக்கு சென்றார்.
கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் பழனி திரும்பிக் கொண்டிருந்தனர். கொடைக்கானல் பைபாஸ்சாலையில் ஆட்டோ வந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோ உருத் தெரியாமல் நசுங்கியது. அதில் பயணம் செய்த 5 பேரும் பலியாயினர். விபத்தில் சாந்தாபடுகாயமடைந்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications