தமிழக சட்டசபை நாளை கூடுகிறது
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுமையாகநடைபெறவில்லை. ஜூலை 31ம் தேதி வரைக்கான தமிழக அரசின் செலவீனங்களுக்குத் தொகை மட்டும்அனுமதிக்கப்பட்டு கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் சந்தித்த தோல்வியையடுத்து தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளைவெளியிட்டது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பபெற்றுக் கொண்டது, மதமாற்றத் தடை சட்டம் வாபஸ், கோவில்களில் ஆடு, கோழி பலியிடுதலுக்கு விதிக்கப்பட்டதடையை விலக்கியது, குடிசைகளுக்கு மீண்டும் இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசுமேற்கொண்டது.
இந் நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. கும்பகோணத்தில் தீவிபத்தில் பலியான90 குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதல் நாள் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்என்று கூறப்படுகிறது.
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள குழப்பம், கும்பகோணம் தீவிபத்து, அரசு திரும்பப்பெற்ற நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் சட்டசபையில் கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.