குழந்தைகளுக்கு சிலை வைத்து கிராமத்தினர் அஞ்சலி
சேலம்:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு காரிப்பட்டி கிராமத்தில் சிலை வைத்து கிராமமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கும்பகோணம் தீவிபத்தின் கொடுமையிலிருந்து கும்பகோணம் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சார்ந்தகிராமத்தினர் இன்னும் மீளவில்லை. தினந்தோறும் கண்ணீர் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணா பள்ளி எதிரே பிரமாண்ட பேனரில் இறந்த குழந்தைகள் அனைவரின் புகைப்படங்களையும் வைத்துஅங்கு தினந்தோறும் மலரஞ்சலி நடந்து வருகிறது.
இந் நிலையில் தீவிபத்தில் இறந்த குழந்தைகள் நினைவாக சேலம் மாவட்டம் காரிப்பட்டி என்ற கிராமத்தில் சிலைவைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறுவனும், சிறுமியுமாக இருவரின் சிலைகள் பஸ் நிலையம் அருகேவைக்கப்பட்டுள்ளன.
எரிந்தது நீங்கள் மட்டுமல்ல, எங்கள் எதிர்கால கனவுகளும் என்ற வாசகம் சிலையின் பீடத்தில்பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு ஏராளமானவர்கள், பள்ளி மாணவ, மாணவியர் அஞ்சலிசெலுத்துகின்றனர்.