For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளக்குறிச்சி: தீவிபத்தில் மூவர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஒரு தீவிபத்தில் 3 பேர் இறந்தனர். இரண்டு பேர்படுகாயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கொங்கராயப்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (32). இவர் தனது வீட்டின்முன்புறம் மளிகை கடை நடத்தி வருகிறார். தனது கடையிலேயே பெட்ரோலும் விற்று வருகிறார். நேற்று இரவுஒருவர் பெட்ரோல் கேட்டுள்ளார்.

அந்த நேரம் இப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் தங்கராஜ் மண்ணெண்ணைய் விளக்கு வெளிச்சத்தில்பெட்ரோல் ஊற்றியுள்ளார். அப்போது பெட்ரோல் சிதறி விளக்கில் விழுந்து தீ பிடித்தது. இந்தத் தீ மளமளவெனபரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இந்த விபத்தில் தங்கராஜியின் தாய் நீலாவதி(55), மகள் மகா(2), பக்கத்து வீட்டை சேர்ந்த அண்ணாமலை(55)ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் தங்கராஜூக்கும் அவரது மனைவி மஞ்சுளாவுக்கும் (28)படுகாயம் ஏற்பட்டது. இவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X