பிரதமருக்கு தமிழக சட்டசபை கண்டனம் !
சென்னை:
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாத்தின்போது பிரதமர் மன்மோகன்சிங், திமுக தலைவர் கருணாநிதிஆகியோரை அதிமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாகக் குறை கூறினர்.
கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற மன்மோகன் சிங் வராததற்கு புவனகிரி தொகுதிஅதிமுக ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அருள் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:
தீ விபத்தை பற்றிக் கேள்விப்பட்டதும் முதல்வர் ஜெயலலிதா உடனே சென்று நிவாரண நடவடிக்கைகளில்ஈடுபட்டார்.
மன்மோகன்சிங் இரங்கல் அறிக்கை விட்டதோடு நிறுத்திக் கொண்டார். அவர் கும்பகோணத்துக்கு வந்து தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தாததைத் தமிழக மக்கள் கண்டிக்கின்றனர்.
ஆனால் சோனியாதான் பிரதமர் என்ற பிம்பத்தை உருவாக்க கும்பகோணத்தில் அங்கும் இங்கும் ஓடி ஆறுதல்கூறினார் சோனியா. இவ்வாறு மக்களை மத்திய அரசைக் கண்டிக்கிறேன் என்றார்.
நிதியமைச்சர் பொன்னையன் கூறியதாவது:
கபினி அணைக்கட்டு நிரம்பிய பின்னர் தொடர்ந்து நீரைத் தேக்கினால் அணைக்கு ஆபத்து ஏற்படும்என்பதாலேயே கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை விடுவித்தது.
ஆனால் மன்மோகன் சிங்குக்கும், சோனியா காந்திக்கும் தான் கடிதம் எழுதியதன் பேரில் கர்நாடக அரசுகாவிரியில் நீரை விடுவித்ததாக திமுக தலைவர் கருணாநிதி கூறுவது உண்மைக்குப் புறம்பானது. தமிழக மக்களைஏமாற்றுகிற நோக்கத்தில் பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார் கருணாநிதி.
நதிகளை இணைக்க முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். நதிகள் இணைப்பின் அவசியத்தை உணர்ந்தகடந்த பாஜக அரசு இது குறித்து ஆராய சுரேஷ் பிரபு தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியது. ஏறக்குறைய 50சதவிகிதப் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இக்குழுவின் பதவிக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதியோடுமுடிவடைந்துவிட்டது. இக்குழுவின் பதவிக்காலத்தை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நீட்டிக்கவில்லை.
மேலும் நதி நீர் இணைப்புக்கு மத்திய அரசின் பட்ஜெட்டில் ஒரு பைசா கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றார்பொன்னையன்.












Click it and Unblock the Notifications