கும்பகோணம் பள்ளியில் மீண்டும் தீவிபத்து
கும்பகோணம்:
93 உயிர்களைப் பலி வாங்கிய கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் நடந்த பயங்கர தீவிபத்தில் 93 அப்பாவிக் குழந்தைகள் கருகிஇறந்தனர். அந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் அதே பள்ளியில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது.
நேற்று இரவு, -மூடப்பட்டுள்ள பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள அலுவலக அறையிலிருந்து புகைவந்துள்ளதை சிலர் பார்த்து விட்டு உடனடியாக தீயணைப்பு அதிகா-ரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். சுமார் 10–நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் அலுவலகத்தில் இறந்த பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்கள்உள்ளிட்டவை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, போலீஸ் பாதுகாப்பில் உள்ள பள்ளிக் கூடத்தில் எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்று பொதுமக்கள்கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், கடந்த வாரம் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து பள்ளி -முழுவதும் தண்ணீரைஊற்றி தீயணைப்புப் படையினர் ஈரமாக்கி வைத்திருந்தபோது தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்றும் கேள்விஎழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications