இராக்: இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி
குவைத்:
இராக்கில் கடத்தப்பட்ட 3 இந்திய லாரி டிரைவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனஅவர்களை அந் நாட்டுக்கு பணிக்கு அனுப்பிய குவைத் நிறுவனம் கூறியுள்ளது.
தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதனால் அவர்கள்விடுவிக்கப்படுவார்கள் என்றும் கல்ப் லிங்க் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்கூறினார்.
இதற்கிடையே அந்த குவைத் நிறுவனம் தனது கிளைகளை உடனடியாக மூடாவிட்டால் 3இந்தியர்கள் உள்பட ஏழு பிணைக் கைதிகளையும் தல்ையை வெட்டிக் கொல்வோம் எனதீவிரவாதிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் அதற்கான கெடுவை மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டித்துள்ளனர்.
இந் நிலையில், இராக்குக்குச் செல்வதற்கு தரப்படும் அனைத்து அனுமதிகளையும், விசாக்களையும்நிறுத்தி வைக்குமாறு அந் நாட்டின் இந்தியத் தூதரகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கல்ப் லிங்க் நிறுவனத்துடனும் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. அப்போதுதீவிரவாதிகளின் நிபந்தனைப்படி, இராக்கில் இருந்து வெளியேறி விடத் தயாராக இருப்பதாகஇந்தியாவிடம் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.